எடப்பாடி பழனிச்சாமி செல்வதற்குதான் சேலத்திற்கு 8 வழிச்சாலை.. டிடிவி தினகரன் பரபர குற்றச்சாட்டு!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செல்வதற்குதான் சேலத்தில் 8 வழிச்சாலை போடப்படுகிறது என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செல்வதற்குதான் சேலத்தில் 8 வழிச்சாலை போடப்படுகிறது என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சென்னையை வந்தடையும் இந்த பசுமை வழி சாலையானது 8 வழி விரைவு சாலையாக அமைக்கப்பட உள்ளது.
இதற்காக 8,000 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மனநிலை சரியில்லை
டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, அமைச்சர்களுக்கு மனநிலை சரியில்லை எனக் கூறியதால் தம்மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

மாணவர்கள் என்ன நினைப்பார்கள்?
கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினால் மாணவர்கள் என்ன நினைப்பார்கள்?

8 வழிச்சாலை திட்டம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி செல்வதற்குதான் சென்னை-சேலம் இடையே விளைநிலங்களை அழித்து 8 வழிச்சாலை போடப்படுகிறது

ஜெ.வையே கொள்ளைடித்தார்
ஜெயலலிதாவையே கொள்ளையடித்தார் என்று கூறும் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. இவ்வாறு டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.












Click it and Unblock the Notifications