சென்னையிலிருந்து குவைத் சென்ற விமானத்தில் இயந்திரக்கோளாறு.. பாதியில் தரையிறக்கப்பட்டது
சென்னையிலிருந்து குவைத்திற்கு புறப்பட்ட ஏர்லைன்ஸ் விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதால் விமானம் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையிலிருந்து குவைத்திற்கு புறப்பட்ட ஏர்லைன்ஸ் விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதால் விமானம் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து குவைத் நோக்கி இன்று அதிகாலை அந்த விமானம் புறப்பட்டு உள்ளது. இந்த ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக விமானம் பறப்பதில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. விமானத்தின் உட்பக்க பாகங்களில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் உள்ளே இருந்த பயணிகள் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர். விமானிகள் சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை மீண்டும் சென்னை நோக்கி திருப்பி இருக்கிறார்கள். வெற்றிகரமாக சென்னையில் மீண்டும் விமானம் இறக்கப்பட்டது.
இதில் விமனாத்திற்கும் எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை. அதேபோல் விமானத்தில் இருந் 106 பயணிகள் மற்ற பணியாளர்கள் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.
இது எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை என்று ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்றும் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.