ஜெயலலிதாவுக்காக சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு தீக்குளித்த தேனி கான்ஸ்டபிள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு சென்னையில் டிஜிபி அலுவலகம் முன்பாக தேனியை சேர்ந்த தலைமை கான்ஸ்டபிள் வேல்முருகன் என்பவர் தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டை கண்டித்து தமிழகத்தில் தீக்குளிப்பு, தற்கொலை சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. இதுவரை மொத்தம் 24 பேர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் இன்று டிஜிபி அலுவலகம் முன்பாக தேனியைச் சேர்ந்த கான்ஸ்டபிள் வேல்முருகன் என்பவர் திடீரென தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரை அங்கிருந்த சக போலீசார் தடுத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
போலீஸ்காரர் ஒருவரே தீக்குளித்த இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications