கண்ணகி கோவிலுக்கு பாதை அமைக்க கோரிக்கை.. கையில் சிலம்புடன் வந்த பெண்ணால் பரபரப்பு!
கண்ணகி கோவிலுக்கு பாதை அமைக்கக்கோரி கையில் சிலம்புடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
கம்பம்: கண்ணகி கோவிலுக்கு செல்ல பாதை அமைத்துத்தரக்கோரி கையில் சிலம்புடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் குமுளியில் இருந்து 14 கிமீ தொலைவிலும், தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியில் பளியங்குடியில் இருந்து 6 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில்.
கடல் மட்டத்தில் இருந்து 5 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ள இந்த கோயிலுக்கு, ஆண்டுதோறும் சித்திரா பவுர்ணமி தினத்தன்று மட்டுமே தமிழகத்தில் இருந்து பக்தர்கள் சென்று வழிபட்டு வர அனுமதிக்கப்படுகின்றனர்.

இரு மாநில பக்தர்கள்
வருடந்தோறும் இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும் கேரளா அரசு சார்பில் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தைகள் நடத்தி சித்திரை முழுநிலவு திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிக்கின்றனர்.

மலைப்பாதையில் நடைபயணம்
சித்திரை முழுநிலவு நாளை தவிர மற்ற நாட்களில் இங்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. இந்த கோவிலுக்கு செல்ல 6 கிலோ மீட்டர் தொலைவு மக்கள் மலைப்பாதையில் நடந்து செல்கின்றனர்.

அரசு கண்டுகொள்ளவில்லை
கண்ணகி கோவிலுக்கு செல்ல சாலை வசதி அமைத்துத்தரக்கோரி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை.

கையில் சிலம்புடன்
இந்நிலையில் கண்ணகி கோவிலுக்கு சாலை அமைத்துத்தர வலியுறுத்தி கம்பத்தை சேர்ந்த நர்மதா என்ற பெண் கையில் சிலம்புடன் கண்ணகி கோவிலுக்கு நடந்து சென்றார்.

கண்ணகி போல் சென்ற பெண்
இதையடுத்து அந்த பெண்ணை தடுத்து நிறுத்திய வனத்துறையினரும் போலீசாரும் அவரது கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். பெண் ஒருவர் தலைவிரி கோலமாக கையில் சிலம்புடன் கண்ணகியை போல் நடந்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications