நாளிதழ்களில் இன்று: 'மலையேற்றத்தில் தொடங்கி, அங்கேயே முடிந்த காதல் கதை'
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'மலையேற்றத்தில் தொடங்கி, அங்கேயே முடிந்த காதல் கதை'
குரங்கணி காட்டுத் தீயில் மரணித்த விபின் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ். விபினின் மனைவி திவ்யாவும் அந்த தீ விபத்தில் சிக்கி 90 சதவீத காயங்களுடன் போராடி வருகிறார் என்று குறிப்பிட்டுள்ள அந்த செய்தியில், விபினும், திவ்யாவும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டதாகவும், இருவருக்கும் மலையேற்றத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு என்றும், பல முறை அவர்கள் மலையேற்றத்தில் ஈடுப்பட்டுள்ளனர் என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. மலையேற்றத்தில் தொடங்கி அங்கேயே முடிந்தது இவர்கள் காதல் கதை என்கிறது அந்த செய்தி.
தினமணி - திகார் சிறையில் கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம் தொடர்பான வழக்கு குறித்து முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது தினமணி நாளிதழ். ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான ஊழல் வழக்கில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை வரும் 24 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி தில்லி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, தில்லியிலுள்ள திகார் சிறையில் உடனடியாக கார்த்தி சிதம்பரம் அடைக்கப்பட்டார் என்கிறது அந்த செய்தி.
தினத்தந்தி - கோடையில் வேண்டாம்'
குரங்கணி தீ விபத்து குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக முதல் பக்கத்தில் தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுவாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த சமயங்களில் காட்டுக்குள் மரங்கள், இலைகள் காய்ந்து இருக்கும் சூழ்நிலையால் தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. கோடை காலங்களில் பொது மக்கள் காட்டுப்பகுதிக்குள் செல்வதை தவரிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக விவரிக்கிறது அந்த செய்தி.
தி இந்து - ரஜினி பல விஷயங்கலில் மெளனமாக இருக்கிறார்'
கோயம்புத்தூரில் செய்தியாளர் சந்திப்பில், காவிரி விஷயத்தில் ரஜினி மெளனமாக இருப்பதாக ஒரு செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ரஜினி இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அல்ல. பல விஷயங்களில் மெளனமாக இருக்கிறார். அதனால், காவிரியுடன் மட்டும் அவரை தொடர்புபடுத்தி பார்ப்பது சரியாக இருக்காது என்று கமல்ஹாசன் கூறியதாக செய்திவெளியிட்டுள்ளது ’தி இந்து’ நாளிதழ்.
டெக்கான் க்ரானிக்கல் - 'சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ஆபத்து
அதிகளவில் சுத்தகரிக்கப்பட்ட சர்க்கரையை எடுத்துக் கொள்வது ஆபத்தை தரும் என்று உலக சுகாதார மையம் கூறி உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது டெக்கான் க்ரானிக்கல் நாளிதழ்.
பிற செய்திகள்:
- உளவாளி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ரஷ்யா பதலளிக்க வேண்டும்: பிரிட்டன் பிரதமர் தெரீசா மே
- தடையை மீறி வட கொரியாவுடன் சிங்கப்பூர் நிறுவனம் தொடர்பு
- நேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 49 பேர் பலி
- "திங்கட்கிழமை காலையில் வந்துடுறேன் அப்பா!" குரங்கணி காட்டுத் தீ-பிபிசி செய்தியாளரின் அனுபவம்
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்
















Click it and Unblock the Notifications