Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை அருகே கடலில் நிர்வாணமாக நீச்சலடித்த வங்கதேச வாலிபரால் பரபரப்பு! போலீசார் தீவிர விசாரணை

சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே உடலில் ஆடையின்றி சந்தேகத்திற்கிடமாக நீந்தி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: எண்ணூர் துறைமுகம் அருகே உடலில் ஆடையின்றி சந்தேகத்திற்கிடமாக நீந்தி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். துறைமுகத்தை நோட்டமிட வந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை துறைமுகத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் சந்தேகத்திற்கிடமாக ஒருவர் உடலில் ஒட்டுத் துணிக்கூட இல்லாமல் நீந்திக்கொண்டிருந்தார். இதனைக் கண்ட நடுக்குப்பம் மீனவர்கள் அந்த நபரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

A person arrested who was suspiciously swim in the sea near the Ennore port

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் முகமது என தெரியவந்துள்ளது. மேலும் அவர் வங்கதேசத்தை சேந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அவரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடன் வேறு சிலரும் வந்ததாக தெரிகிறது.

அவர்கள் எங்கு சென்றார்கள்? துறைமுகத்தை நோட்டமிட வந்தனரா அல்லது ஏதேனும் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அவர் எப்படி எண்ணூர் வரை வந்தார் என்றும் போலீசார் எச்சரித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+