For Daily Alerts
Just In
ஜெ. சமாதியில் ஆயுதப்படை போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் ஆயுதப் படை போலீஸ் அருள் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் ஆயுதப் படையைச் சேர்ந்த போலீசார் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியிலும் நாள்தோறும் கூட்டம் அலைமோதுகிறது. அங்கு ஆயுதப் படை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களில் மதுரையைச் சேர்ந்த அருள் என்ற போலீஸ்காரர் இன்று காலை திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து ஜெயலலிதா சமாதிக்கு போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். எதற்காக அருள் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்த விசாரணை தொடருகிறது.
Comments
English summary
A policeman Arul was committed suicide at Jayalalithaa memorial.