For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீதிபதி கிருபாகரனை பேஸ்புக்கில் விமர்சித்த பெண் கைது

நீதிபதி கிருபாகரனை பேஸ்புக்கில் விமர்சித்த பெண் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: நீதிபதி கிருபாகரனை பேஸ்புக்கில் விமர்சித்த பெண் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மகாலட்சுமி என்ற அந்த பெண் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி என்ற பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி. சமீபத்தில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நடத்திய போராட்டம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்விகள் எழுப்பி இருந்தார்.

A woman arrested over disgracing Justice Kirupakaran

இந்த நிலையில் நீதிபதி கிருபாகரனை விமர்சித்து மகாலட்சுமி முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் சத்துவாச்சேரி போலீஸார் மகாலட்சுமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த நிலையில் குற்றவியல் நடுவர் மன்றம் அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டு இருக்கிறது. இதையடுத்து அவர் விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்டார்.

English summary
A woman arrested over disgracing Justice Kirupakaran in facebook.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X