மழை வளம் வேண்டி.. கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் ஆனி நாற்று நடவு விழா
பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் ஆனி நாற்று நடவு விழா நடைபெற்றது.
Recommended Video
கோவை: மழை வளம் மற்றும் இயற்கை வளம் செழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் இன்று ஆனி நாற்று நடவு திருவிழா நடைபெற்றது.
கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டுன் ஆனி உற்சவ நாற்று நடவு விலை இன்று நடைபெற்றது. மழை வளம், இயற்கை வளம் பெற்று மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
கடந்த 11 ஆம் தேதி நாற்று விடுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. தொடர்ந்து நேற்று வரை தினமும் மாலை நெல் நாதருக்கு பூஜை செய்விக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையடுத்தி இன்று கேதாரீஸ்வரர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் கோயில் மடத்தில் முளை விட்ட நிலையில் உள்ள நாற்றுகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து ஆனி உற்சவ நாற்று நடவு விழா நடத்தப்பட்டது. ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.