கள்ளக்காதலுக்காக மகளை கொல்ல என்ன மாத்திரை பயன்படுத்தியுள்ளார் இந்த அபிராமி பாருங்க...!!
கள்ளக்காதலுக்காக தனது 4 வயது மகளுக்கு பெண்கள் பயன்படுத்தும் மாத்திரைகளை கொடுத்து அபிராமி கொலை செய்துள்ளார்.
Recommended Video

சென்னை: கள்ளக்காதலுக்காக தனது 4 வயது மகளுக்கு பெண்கள் பயன்படுத்தும் மாத்திரைகளை அதிகளவில் கொடுத்து அபிராமி கொலை செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் அபிராமி. திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பிரியாணி கடை ஊழியர் சுந்தரத்துடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இந்த விஷயம் குடும்பத்தினருக்கு தெரியவரவே கண்டித்துள்ளனர். இதனால் ஒரே அடியாக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சுந்தரத்தின் வீட்டில் தங்கிவிட்டார்.

வெளியில் செல்ல கட்டுப்பாடு
இதனால் ஆத்திரமடைந்த அபிராமியின் அப்பா, அவரை அடித்து உதைத்து சுந்தரத்தின் விட்டில் இருந்து அழைத்து வந்து கணவருடன் சேர்த்து வைத்தார். மேலும் வெளியில் செல்லக்கூடாது என அவர்கள் கட்டுப்பாடு விதித்தனர்.

30ஆம் தேதி இரவு
இதனால் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளது போல் உணர்ந்த அபிராமி தனது 7 வயது மகன், 4 வயது மகள் மற்றும் கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக கடந்த 30ஆம் தேதி இரவு முதலே வேலையை தொடங்கினார் அபிராமி.

4 வயது மகள் கொலை
அன்று இரவே மகள், மகன் மற்றும் கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்ததாக கூறப்பட்டது. இதில் 4 வயது மகள் கார்னிகா பரிதாபமாக உயிரிழந்தார்.

தூங்குவதாக சமாளிப்பு
மகன் அஜயும் கணவர் விஜயும் உயிர் பிழைத்தனர். மறுநாள் முத்தம் அலுவலகம் செல்லும் முன்பாக மகளுக்கு முத்தம் கொடுக்க சென்ற கணவனிடம் மகள் அசந்து தூங்குவதாக கூறி சமாளித்து வெளியே வேலைக்கு அனுப்பினார் அபிராமி.

மூச்சை திணறடித்து கொலை
கணவர் வேலைக்கு சென்ற பிறகு மகனை படுக்கை அறைக்கு அழைத்து சென்ற அபிராமி மூக்கு மற்றும் வாயை பொத்தி மூச்சை திணறடித்த கொன்றார்.

கைது செய்த போலீஸ்
கணவர் இரவு அலுவலகத்திலேயே தங்கியதால் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார். இதைத்தொடர்ந்து கேரளாவுக்கு தப்பி சென்ற அபிராமியை கள்ளக்காதலனை வைத்து நாகர்கோவில் வரவழைத்து கைது செய்தது போலீஸ்.

தூக்க மாத்திரை அல்ல
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தார். முதலில் குடும்பத்தினரை கொல்ல தூக்கமாத்திரை கொடுத்ததாக கூறிய அபிராமி தற்போது தான் கொடுத்தது தூக்கமாத்திரை அல்ல என அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார்.

பெண்கள் பயன்படுத்தும் மாத்திரை
அதாவது குழந்தைகளை கொல்ல தூக்க மாத்திரை எப்படி கிடைத்தது என போலீசார் அபிராமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தான் பயன்படுத்தியது தூக்க மாத்திரைகள் இல்லை எனவும் பெண்கள் பயன்படுத்தும் மாத்திரைகள் எனவும் கூறியுள்ளார் அபிராமி.

மகள் மட்டும் பலி
தன்னிடம் ஐந்து மாத்திரைகள் இருந்ததாகவும், அதிக அளவில் மாத்திரை சாப்பிட்டால் உயிரிழப்பு ஏற்படும் என நினைத்து பாலில் அதை கலந்ததாக கூறியுள்ளார். ஆனால், மகள் மட்டுமே உயிரிழந்ததாகவும் கணவருக்கும், மகனுக்கும் எதுவும் ஆகவில்லை என்றும் அபிராமி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications