அந்த அபிராமியா இப்படி.. இவருக்குள்ளா அத்தனை கொடூர மனம்??!
Recommended Video

சென்னை: ஒரு வீடியோவில் அபிராமி தன் குழந்தைகளுடன் பாடி மகிழ்வது வெளியாகியுள்ளது. இதை பார்க்கும் போது அவர்தான் குழந்தைகளை கொன்றிருப்பாரா என்ற "சந்தேகம்" எழுகிறது.
குன்றத்தூரை சேர்ந்த அபிராமி அதே பகுதியில் வசிக்கும் பிரியாணி கடை ஊழியர் சுந்தரத்துடன் கள்ளக்காதலில் ஈடுபட்டார். இது அவரது கணவன் மற்றும் பெற்றோருக்கு தெரிய வரவே கெடுபிடிகள் அதிகரித்தன.
இதைத் தொடர்ந்து கடந்த 5 தினங்களுக்கு முன்பு அவர் தனது இரு குழந்தைகளை கொன்றுவிட்டு சுந்தரத்துடன் வாழ தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீஸார் அவரை நாகர்கோவிலில் வைத்து கைது செய்தனர். அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அபிராமி
இந்நிலையில் அவர் குழந்தைகளுடன் சந்தோஷமாக இருந்த வீடியோக்கள் தற்போது வெளியாகி வருகின்றன. கடந்த ஜூன் மாதம் திருமங்கலத்தில் புதிதாக தொடங்கப்பட்ட மால் திறப்பு விழாவில் அபிராமி தனது குழந்தைகள், தாய், தந்தை ஆகியோருடன் சென்றுள்ளார்.

வீடியோ
அங்கு தனது குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ்ந்த காட்சிகளை பார்க்கும் போது இவரா கொன்றார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அந்த அளவுக்கு அவர் மீதான காமம் கண்ணை மறைத்துவிட்டது. இந்நிலையில் தற்போது அவர் செய்த டப்ஸ்மாஷ் வீடியோக்கள் பிரபலமாகி வருகின்றன. அதில் சுந்தரத்துடன் ரொமான்ஸ் செய்யும் டப்ஸ்மாஷ் வீடியோவும் வைரலாகி வருகிறது.

குழந்தைகள்
ரஜினி ரசிகையான அபிராமி குழந்தைகளுடனான காலா படத்தில் வரும் வசனங்களையும் , பாட்டையும்,, பஞ்ச் டயலாக்குகளையும் பேசும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. குழந்தைகளும் ரசிக்கின்றனர். அந்த வீடியோவில் கியாரே செட்டிங்கா என்ற வசனத்தை பேசிய அவர் காலா கருப்பு, கரிகாலன் என்ற அபிராமி செல்லமாக என்ன பேசலாம் என குழந்தைகளிடம் கேட்கிறார்.

இவர்தானா அதை செய்தார்
அதற்கு அந்த சிறுவன் காலா படத்தில் வரும் பாட்டை பாட அந்த வரியை பிடித்து கொண்டு அபிராமியும் பாடுகிறார். பின்னர் நிக்கல் நிக்கல் பாடலையும் பாடி மகிழ்கிறார். "கிளம்பு கிளம்பு விடிஞ்சிருச்சி, கிளம்பு, கிளம்பு , கிளம்பு கிளம்பு அந்து போச்சு கிளம்பு கிளம்பு" என்று மிகவும் மகிழ்ச்சியாக குழந்தைகளுடன் விளையாடியுள்ளார். இதை பார்க்கும் அவரா இந்த பிஞ்சுகளுக்கு நஞ்சை வைத்தார் என எண்ணத் தொடங்கியது.












Click it and Unblock the Notifications