Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்று நிரூபித்த அபிராமி கைது

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    2 நாட்கள் வெறியாட்டம் ஆடிய அபிராமி | 15 நாள் நீதிமன்றக் காவல்- வீடியோ

    நாகர்கோவில்: கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளையே கொன்ற குன்றத்தூர் அபிராமியை தனிப்படை போலீஸார் நாகர்கோவிலில் கைது செய்தனர்.

    குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளை, அகதாவரன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய் (30). இவர் தனியார் வங்கியில் வீடுகள் வாங்க கடன் வாங்கி கொடுக்கும் பிரிவில் வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி அபிராமி (25). இவர்களுக்கு அஜய், கார்னிகா என்ற இரு குழந்தைகள் இருந்தனர்.

    கதவு திறக்குமாறு...

    கதவு திறக்குமாறு...

    இந்நிலையில் விஜய் நேற்று முன் தினம்இரவு வங்கியில் பணி காரணமாக வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து அவர் நேற்று அதிகாலை வீட்டுக்கு சென்றார். அப்போது கதவை திறக்குமாறு மனைவிக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

    விசாரணை

    விசாரணை

    இதையடுத்து அவர் கதவை தட்ட முயன்ற போது கதவு திறந்திருந்தது தெரியவந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது இரு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    பிரியாணி கடையில் கள்ளக்காதலன்

    பிரியாணி கடையில் கள்ளக்காதலன்

    இந்நிலையில் வீட்டில் அபிராமியும் அவரது இரு சக்கர வாகனமும் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து அபிராமியை தேடுவதற்காக தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். இதனிடையே அபிராமிக்கு குன்றத்தூர்- போரூர் நெடுஞ்சாலையில் பிரியாணி கடையில் பணியாற்றும் சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது.

    சுந்தரம் கைது

    சுந்தரம் கைது

    கள்ளக்காதலன் சுந்தரத்தை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் நாகர்கோவிலுக்கு அபிராமி தப்பி சென்றது தெரியவந்தது.

    தாய் கைது

    தாய் கைது

    குழந்தைகளை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அபிராமியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் நாகர்கோவில், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு விரைந்தனர். இந்த நிலையில், விஷம் கலந்து கொடுத்து தனது 2 குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி நாகர்கோவிலில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+