நமீதா உடையை பற்றி ஆபாசமாக பேசிவிட்டு பரணியை வெளியே அனுப்பிய பிக்பாஸ் டீம்!
பிக்பாஸ் டீம் பரணி தவறான நடத்தைக்கொண்டவர் என்பது போல் சித்தரித்து வெளியே அனுப்பியுள்ளது.
சென்னை: நமீதாவின் உடையை பற்றி ஆபாசமாக பேசிய பிக்பாஸ் டீம் பரணி தவறான நடத்தைக்கொண்டவர் என்பது போல் சித்தரித்து வெளியே அனுப்பியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் நடத்தி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். வட இந்தியாவில் புகழ்பெற்ற இந்நிகழ்ச்சியை தமிழிலும் முயற்சித்துள்ளனர்.
அண்மையில் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். தொடங்கிய நாள் முதலே இந்நிகழ்ச்சி குறித்து பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கழுவி கழுவி ஊற்றி வருகின்றன.

கட்டிப்பிடிக்க ஆள் இல்லை
நிகழ்ச்சி தொடங்கிய அன்றே சக போட்டியாளரான நடிகர் ஸ்ரீயிடம் ஜல்லிக்கட்டு புகழ் ஜூலி என்னை கட்டிப்பிடிக்க ஆள் இல்லை என கூறினார். இது தமிழக மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூகவளைதளங்களில் ஜூலியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்.

கார்னர் செய்யப்பட்ட பரணி
இதையடுத்து சர்ச்சைக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் நகர்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. ஆண்கள் டீமில் கஞ்சா கறுப்பு, சினேகன் ஆகியோரால் கார்னர் செய்யப்பட்டார் பரணி.

அடிக்க பாய்ந்த கஞ்சாகறுப்பு
ஒரு கட்டத்தில் தகாத வார்த்தையால் திட்டிய கஞ்சா கறுப்பு, நடிகர் பரணியை அடிக்க பாய்ந்தார். இதனால் நிகழ்ச்சியில் பரபரப்பு தொற்றியது.

கஞ்சா கறுப்பை வெளியேற்றிய மக்கள்
இதையடுத்து எப்படியாவது பரணியை வெளியேற்ற வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர் கஞ்சா கறுப்பு மற்றும் அவரது சகாக்கள். இதற்காக பரணி பெயரை எவிக்ஷனுக்காக நாமினேட் செய்தனர்.

நீடித்த பரணி
ஆனால் மக்கள் வாக்களிக்காததால் கஞ்சா கறுப்பு வெளியேற்றப்பட்டார். பரணி பீக்பாஸ் வீட்டிலேயே நீடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

பரணியால் பாதுகாப்பில்லை
ஆனால் பரணியால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கஞ்சா கறுப்பு ஏற்கனவே கொளுத்தி போட்டது நேற்று கொழுந்துவிட்டு எரிந்தது. பரணி வெளியேற வேண்டும் என அவரை கார்னர் செய்து பிக்பாஸ் குடும்பத்தினர் ஸ்ட்ரைக் செய்தனர்.

தப்ப முயன்ற பரணி
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பரணி சுவர் ஏறிகுதித்து வீட்டில் இருந்து தப்ப முயன்றார். இதையடுத்து விதிகளை மீறியதாக அவர் வெளியேற்றப்பட்டார். அதுவரை அண்ணன் அண்ணன் என்று கூறி வந்த ஜூலியும் மற்றவர்களுடன் சேர்ந்து பரணி குறித்து தவறாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நமீதா உடைக்குறித்து ஆபாச பேச்சு
முந்தைய எபிசோடில் நமீதா உடுத்தியிருந்த உடையை வையாபுரி, கஞ்சா கறுப்பு, சினேகன் உள்ளிட்டோர் மிக கேவலமாகவும் ஆபாசமாகவும் பேசி கமெண்ட் அடித்தனர். ஆனால் அவர்கள் பரணி தவறானவர் என கஞ்சா கறுப்பு கூறியதை வைத்து ஓரம் கட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications