ஜல்லிக்கட்டு போராட்டம் போல மாறிய குமரி மீனவர்கள் போராட்டம்.. ஜி.வி.பிரகாஷ் ஆதரவு
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தை போலவே குமரி மாவட்ட மீனவர் போராட்டத்திற்கும் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.
ஒகி புயலால் மாயமான மீனவர்களை மீட்க கோரி, குழித்துறை பகுதியில் மீனவர்கள் 12 மணி நேரத்துக்கும் மேலாக ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். பல கிராம மீனவர்களும் குழித்துறை ரயில் நிலையத்தில் குவிந்தனர்.
போராட்டக்காரர்கள் மத்தியில் இன்று கலெக்டர் சஜ்ஜன்சிங் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதனிடையே, ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ள டிவிட்டில்,
தன் கணவனை நித்தம் நினைத்து ரத்தம் உறைந்த என் அக்கா தங்கையின் விழி நீர் துடைக்க என் மீனவ மரத்தமிழர் மக்கள் மூழ்கி சாவும் முன் காப்பற்ற என் இரு கை கைகூப்பி வேண்டுகிறேன் pic.twitter.com/juN3L7fEZf
— G.V.Prakash Kumar (@gvprakash) December 7, 2017
"தன் கணவனை நித்தம் நினைத்து ரத்தம் உறைந்த என் அக்கா தங்கையின் விழி நீர் துடைக்க என் மீனவ மரத்தமிழர் மக்கள் மூழ்கி சாவும் முன் காப்பற்ற என் இரு கை கைகூப்பி வேண்டுகிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தை போலவே குமரி மாவட்டத்தில் மீனவர் போராட்டம், வீரியம் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.