ஜனவரியில் நட்சத்திர கிரிக்கெட்... நடிகர்கள் ரஜினி, கமலிடம் ஒப்புதல்... நடிகர் கார்த்தி தகவல்
வரும் ஜனவரி மாதம் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்படும் என்று நடிகர் கார்த்தி அறிவித்தார்.
சென்னை : வரும் ஜனவரி மாதம் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் கார்த்தி தெரிவித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில், மூத்த மற்றும் முன்னணி திரைப்பட , நாடக நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நடிகர் கார்த்தி பேசுகையில், வரும் ஜனவரியில் கிரிக்கெட் போட்டி நடத்தப்படும். இதற்காக நடிகர்கள் கமல், ரஜினியிடம் ஒப்புதல் பெற்று விட்டோம். அறங்காவல் குழுவிடம் ஒப்புதல் பெறப்படும்.
உறுப்பினர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்ய முடியவில்லை.
ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட பிறகு, நடிகர் சங்கம் கட்டடம் கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியுதவியை காட்டிலும் செலவு அதிகமாகும் என்றார் கார்த்தி. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வசதியாக, நடிகர் சங்கத்தின் வேண்டுகோள் படி இன்று சினிமா படப் பிடிப்புகள் ரத்து செய்து, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications