நடிகர் எம்.ஆர்.ஆர் வாசுவின் மனைவியிடம் கத்தி முனையில் நகை கொள்ளை!
சென்னை: சென்னையில் பிரபல முன்னாள் நடிகர் எம்.ஆர் ராதாவின் மகனான நடிகர் வாசுவின் மனைவியிடம் கத்தி முனையில் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மனைவியிடம் கத்தி முனையில் மொத்தமாக 18 சவரன் செயின் பறிக்கப்பட்டு உள்ளது. அசோக் நகர் போஸ்டல் காலனி, 3 ஆவது தெருவில் வசித்து வருகின்றார் எம்.ஆர்.ஆர்.வாசு சதீஷ்.
பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகனான இவர் பல்வேறு திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார்.
அவரது மனைவி மகாலட்சுமி . அவர் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் இரவு 10:30 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.
வீடு அருகே மகாலட்சுமி வந்தபோது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இரண்டு வாலிபர்கள் அவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி 18 சவரன் செயினை பறித்து தப்பினர். இதுகுறித்து வாசு அளித்த புகாரின் பேரில் அசோக் நகர் போலீசார் இக்கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.