ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு... மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் குடும்பத்தோடு சிம்பு மவுனப் போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு தனது வீட்டின் முன்பு மவுன போராட்டம் நடத்தினார். அவரது வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு இன்று மாலை தனது வீட்டின் முன்பு குடும்பத்துடன் மவுன போராட்டம் நடத்தினார். இந்தப் போராட்டத்தில் ஏராளமான ரசிகர்களும் கலந்து கொண்டனர்.
நடிகர் சிம்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று மாலை 5 மணிக்கு தனது வீட்டின் முன்பு 10 நிமிடம் நின்று மவுன போராட்டம் நடத்தப் போவதாக நேற்று அறிவித்தார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழர்கள் தங்கள் வீட்டின் முன்பு 10 நிமிடம் மவுனமாக நின்று மவுன போராட்டம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி நடிகர் சிம்பு தியாகராய நகரில் உள்ள தனது வீட்டு வாசலில் தந்தை டி.ராஜேந்தர், தாய் உஷா உட்பட குடும்பத்தினருடன் கறுப்பு நிற ஆடை அணிந்து மவுன போராட்டம் நடத்தினார். சிம்பு வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்களும் கறுப்பு சட்டை அணிந்தபடி மவுன போராட்டம் நடத்தினர்.
அவர்கள் கைகளில் கறுப்புக்கொடியுடன் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி அமைதி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
@iam_str தலைவா 🙌🙌👏💪 #StandAsTamilan#UnityForJallikattu5PmJan12 #STRForJallikattu pic.twitter.com/lvv6pEeo43
— ❤ நவீன் உயிர் STR ❤ (@de7456bc26b0464) January 12, 2017












Click it and Unblock the Notifications