நடிகர் சிம்பு தலைமறைவாக இல்லை: சிம்புவின் வழக்கறிஞர் விளக்கம்
சென்னை: நடிகர் சிலம்பரசன் தலைமறைவாக இல்லை என அவரது வழக்கறிஞர் தியாகேஸ்வரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் யூடியூப்பில் வெளியாகிய பீப் பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியதாகவும் அதற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்தாகவும் கூறப்படுகிறது. பீப் பாடல் விவகாரத்தில் நாள்தோறும் சிம்புவிற்கு நெருக்கடிகள் அதிகரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிம்பு தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் நடிகர் சிம்புவை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக சென்னை காவல் துறையினர் தெரிவித்து இருந்னர். தமிழ்நாட்டில் சிம்பு இல்லை என்பதால் கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் போலீசார் தங்களது தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவை கைது செய்ய போலீஸ் தீவிரமாக இருப்பதாக செய்திகள் வெளியானது. மேலும் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக விமான நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிம்பு வழக்கறிஞர் தியாகேஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார்.
அவர கூறுகையில், சிம்பு தலைமறைவாக இல்லை. இதுவரை சிம்புவை தேடியோ, கைது செய்யும் நடவடிக்கையிலோ இதுவரை யாரும் வரவில்லை. பீப் பாடலை யூடியூபில் வெளியிட்டவர் மீது முறையாக வழக்குகள் பதியவில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications