பூச்சி மருந்தைக் குடித்து கூடுதல் டிஜிபி முத்துக்கருப்பனின் தந்தை தற்கொலை

Subscribe to Oneindia Tamil

Muthukaruppan
பரமக்குடி: தமிழக கூடுதல் டிஜிபி முத்துக்கருப்பனின் தந்தை காளிமுத்து பூச்சி மருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பரமக்குடி அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பரமக்குடி அருகே உள்ள தென்பொதுவக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 75 வயதான காளிமுத்து. இவரது மகன்தான் முத்துக்கருப்பன். ஒரு காலத்தில் தமிழகத்தை பரபரப்பில் ஆழ்த்திய காவல்துறை அதிகாரியான முத்துக்கருப்பன் சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்தவர். அவர் ஆணையராக இருந்தபோதுதான் நள்ளிரவில் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டார். தற்போது ஊர்க்காவல் படை கூடுதல் டிஜிபியாக இருக்கிறார்.

காளிமுத்து உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாராம். சிகிச்சை எடுத்து வந்தபோதிலும் உடல் நிலை சரியாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் பூச்சி மருந்தைக் குடித்து விட்டார்.

இதையடுத்து போலீஸார் காளிமுத்துவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பரமக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+