ஆடிப்பெருக்கு: காவிரியில் நீராடி தமிழக மக்கள் வழிபாடு
மேட்டூர்: காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காவிரிப் படுகைகளில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
ஆடிப்பெருக்கு தினமான இன்று, காவிரியில் நீராடினால் புண்ணியம் என்பது ஐதீகம். கர்நாடகாவில் பெய்து வரும் கன மழையால் காவிரி நதியில் வெள்ளம் பெருகி ஓடி வருகிறது. எனவே தமிழக மக்கள் உற்சாகமாக இன்று ஆடிப்பெருக்கு கொண்டாடினர்.

பவானி கூடுதுறை
ஆடிப்பெருக்கு: காவிரியில் நீராடி தமிழக மக்கள் வழிபாடு ஈரோடு பவானி கூடுதுறையில் திரண்ட ஆயிரக்கணக்கானோர், காவிரித்தாய்க்கு நன்றி தெரிவித்து பூஜை செய்தனர். இல்லறம் செழிக்க புதுமணத் தம்பதிகளும் பூஜை செய்தனர். அதிகாலையிலேயே காவிரி கரைக்கு சென்று எண்ணெய் தேய்த்து தலையில் அருகம்புல், வெற்றிலைப் பாக்கு, வாழைப்பழம் ஆகியவற்றை வைத்து ஆற்றில் மூழ்கி குளித்துவிட்டு பூஜை செய்து வழிபட்டனர்.

கன்னிப்பெண்கள்
திருமணமாகாத கன்னிப் பெண்கள் காவிரியில் குளித்து வழிபட்டு தங்களுக்கு விரைவில் மணமாகவும், மனதுக்கு பிடித்த மணமகன் அமையவும் வேண்டினார்கள். இதற்காக அவர்கள் வீட்டில் நவதானியங்கள் போட்டு வளர்த்து வந்த முளைப்பாரிகளை காவிரி ஆற்றில் விட்டனர். கொத்து கொத்தாய் பச்சை பசேல் என்று மிதந்து சென்ற அந்த முளைப்பாரிகள் நீரலையில் அசைந்தாடி சென்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

புதுமணத் தம்பதிகள்
புதுமணத்தம்பதிகள் தங்கள் வாழ்வில் வளமும், நலமும் பெருக வேண்டும் என பிரார்த்தனை செய்து திருமண நாளில் தாங்கள் அணிந்திருந்த மணமாலைகளை காவிரி ஆற்றில் விட்டனர். சுமங்கலி பெண்கள் தங்கள் மாங்கல்ய மஞ்சள் கயிறுகளை புதுப்பித்து அணிந்து கொண்டனர். ஆண்களும் இந்த வழி பாட்டில் கலந்து கொண்டு காவிரி தாயை வேண்டி கையில் மஞ்சள் கயிறுகளை கட்டிக்கொண்டனர்.

ஸ்ரீரங்கத்திலும் கோலாகலம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் இருந்து ஸ்ரீநம்பெருமாள் காலை 6 மணிக்கு புறப்பட்டு 11.30 மணிக்கு அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபத்திற்கு எழுந்தருளினார். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் திரண்ட ஏராளமானோர், மஞ்சள், வளையல், அரிசி, வெல்லம் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications