Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலையில் எடப்பாடி.. தினகரனுக்கு ஆதரவு.. அறிவாலயத்தில் ஸ்டாலினுடன் சந்திப்பு.. மூவர் அணி பிசி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : பேரறிவாளனை பரோலில் விடுவிக்க சட்டசபையில் குரல் கொடுத்தற்காக அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

ராஜீவ் கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற பேரறிவாளன் சுமார் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். இவருக்கு பரோல் வழங்க வேண்டும் என்று பேரறிவாளன் மற்றும் அவரது தாயர் அற்புதம்மாள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். கடந்த சட்டசபை கூட்டத்தின் போது தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு உள்ளிட்ட அதிமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

 ADMK alliance MLas met Opposition leader Stalin

இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்குமாறு சட்டசபை கூட்டத்தின் போதே 2 முறை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் 3 எம்எல்ஏக்களும் சந்தித்து ஆதரவு கோரினர். இந்நிலையில் கடந்த வாரம் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் கொடுக்கப்பட்டுள்ளதையடுத்து, அவர் ஜோலார்பேட்டை அருகில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார். பேரறிவாளனை பலரும் சந்தித்து சென்று வருகின்றனர்.

 ADMK alliance MLas met Opposition leader Stalin

இந்நிலையில் பேரறிவாளனை பரோலில் விடுவித்ததற்காக தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து அதிமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் நன்றி தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினையும் அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+