"தமிழகத்தில் பாஜக உடன் கூட்டணி தான், ஆனால்.." எடப்பாடி சொன்னதும்.. மொத்தமாக பார்த்த கூட்டம்
சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.
தலைநகர் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பின் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.

அதிமுக: அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக என்பது ஒன்றுதான் என்பதற்கான தெளிவு கிடைத்துவிட்டது என்றும் இனி பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படும் என்றும் தெரிவித்தார். 2 கோடி உறுப்பினர்களை அதிமுகவில் இணைப்போம் என்று தெரிவித்த அவர், ஒற்றை தலைமை என்று கூற வேண்டாம்; நான் சாதாரண தொண்டன் தான் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "தேர்தல் ஆணையம் அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்று அங்கீகரித்துள்ளது. நீதிமன்றமும் இதையேதான் சொல்லியுள்ளது. அதிமுக இனி பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்படும். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக வெற்றிகரமாக இயங்கும். ஏற்கனவே நீதிமன்ற தீர்ப்பின்படி, பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அனைத்து பொது உறுப்பினர்கள் எல்லாம் சேர்ந்து ஒருமனதாகப் பொதுச்செயலாளரைத் தேர்வு செய்துள்ளனர்.
கனவை நனவாக்குவோம்: எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை நிச்சயம் நாங்கள் நனவாக்குவோம். நீண்ட சட்ட போராட்டத்திற்குப் பின்னர் தான், இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. 1.5 கோடி அதிமுக தொண்டர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருக்கிறார்கள். எங்களுக்கு மக்கள் பணி இருக்கிறது. இனி மற்றவர்கள் குறித்துப் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
ஒரு சிலரைத் தவிர்த்து உண்மையான அதிமுக தொண்டர்கள் அனைவரையும் கட்சிக்குள் இணைத்துக் கொள்ள நாங்கள் தயாராகவே உள்ளோம். ஏற்கனவே இது குறித்து அழைப்பு விடுத்துள்ளோம். ஒரு சிலர் என்று யாரைச் சொல்கிறேன் என்று அனைவருக்கும் புரியும். புதிய உறுப்பினர் சேர்க்கை பணி தொடங்கப்பட்டுள்ளது. பூத் கமிட்டி அமைக்கும் பணி, மகளிர் அணி அமைப்பது, இளைஞர்கள்- இளம்பெண்கள் பாசறை தொடங்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
நான் சாதாரண தொண்டர்கள்தான்: ஒற்றை தலைமை என்று நீங்கள் யாரும் என்னைச் சொல்ல வேண்டாம். நான் ஒரு சாதாரண தொண்டர்தான். உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து என்னைப் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்து உள்ளார்கள் அவ்வளவு தான். கட்சிக்கு ஒரு வலுவான தலைமை என்பதால் தான், கட்சி தொண்டர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். என்னைப் பொறுத்தவரை இன்றும் நான் சாதாரண தொண்டன் தான். அவர்கள் அனைவருடன் இணைந்து பயணித்து அதிமுக ஆட்சியை அமைப்பதே எங்கள் இலக்காகும்.
தமிழ்நாட்டில் திமுகவை எதிர்க்கும் ஒரே கட்சி நாங்கள்தான். எனவே, அதிமுகவை வலுவூட்டும் அனைவரையும் கட்சிக்குள் இணைத்துக் கொள்வதில் எங்களுக்குச் சந்தோஷம்தான். அதிமுக எப்போதும் ஒன்றுதான். அதற்கு இன்று தெளிவான முடிவு வந்துவிட்டது. இங்கே குழப்பமே இல்லை. சில சுயநலவாதிகள் மட்டுமே கட்சியில் இருந்து பிரிந்து சென்றுள்ளனர். கட்சியில் 1.5 கோடி தொண்டர்கள் இருக்கும் நிலையில், 2 கோடி தொண்டர்களாக அதிகரிக்கத் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கூட்டணி: எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் இனி உரிய முடிவை எடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் தான் அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறது. கர்நாடக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது நிர்வாகிகளின் கோரிக்கை. ஒரு தொகுதியில் மட்டும் நிற்கிறோம். எங்கள் அடையாளத்திற்காக நாங்கள் நிற்கிறோம். தமிழ்நாட்டில் எப்போது தேர்தல் வந்தாலும் நாங்கள் தான் வெல்வோம். திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை எந்த திட்டத்தை அறிவித்துள்ளார்.
மக்களுக்கு எதாவது ஒரு நன்மை நடந்துள்ளதா.. அதிமுக ஆட்சியில் தான் தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியது. தலைமை கழகத்தில் அத்துமீறி நுழைந்தது யார்.. ஆவணங்களை எடுத்துச் சென்றது யார் என்பது அனைவருக்கும் தெரியும். இன்று ஓபிஎஸ் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவே இது குறித்து சட்டசபையில் பேசியுள்ளார். ஓபிஎஸ் திமுக ஆட்சியின் பீ டீமாக செயல்படுகிறார். அவர்களுடன் இணைந்து தான் தலைமை கழகத்திற்குள் நுழைந்து சூறையாடியுள்ளார்.
அடுத்து சில நிமிடங்களில் அதிகாரிகள் வந்து சீல் வைக்கிறார்கள். எப்படி எல்லாம் அடுத்தடுத்து நடக்கிறது. திமுக ஓபிஎஸை பயன்படுத்தி இந்த நாடகத்தை நடத்தினார்கள். வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்த உள்ளோம். இந்திய வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய மாநாடு நடந்தது இல்லை என்பது போல நடத்திக் காட்டுவோம்" என்றார்.
-
அமித்ஷாவுக்கு டப்பிங் கொடுக்க வெக்கமா இல்லையா.. எடப்பாடியை வெளுத்து வாங்கிய சிதம்பரம் -
ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை.. நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் குறித்த கேள்விக்கு எடப்பாடி ரியாக்ஷன் -
7 முறை போட்டி.. 5 முறை வெற்றி! சொந்த தொகுதியில் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் கிராப் என்ன! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
ஒன்னு கூடிட்டாங்க.. அஜித்துடன் ரஜினி! எடப்பாடிக்கு ஏகப்பட்ட ஹேப்பி! காத்திருந்த திண்டுக்கல் கிஃப்ட்! -
Election Exclusive: வாயில் வாஸ்து சரியில்ல.. ஜெயிச்சாலும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு சிக்கல்! திமுக போடும் பலே ப்ளான்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
சம்பந்திக்காக சேராத இடம் சேர்ந்து.. வஞ்சத்தில் வீழ்ந்த எடப்பாடி! வஞ்சகன் மோடி! முத்தரசன் அட்டாக்! -
"எங்க ஏரியாவுக்கு வா"! சுந்தர் சி முன்பே "ஸ்டைல் பாண்டி" டயலாக் சொன்ன எடப்பாடி! குலுங்கிய மதுரை! -
ஜெயலலிதா இருந்தவரை வாலை சுருட்டி இருந்தாங்க.. நான் இருந்திருந்தால்.. கண் சிவந்த சசிகலா -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு












Click it and Unblock the Notifications