இன்று அமாவாசை... அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என தொண்டர்கள் எதிர்பார்ப்பு
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிகளின் வேட்பாளர் தேர்வு பணி மும்முரமாகியுள்ளது. இந்நிலையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகலாம் என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
தமிழக சட்டசபைக்கு மே 16 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அதிமுக, திமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற்றன. பின்னர் திமுக, தேமுதிகவில் மும்முரமாக நேர்காணல் நடத்தப்பட்டது. தேமுதிகவில் நேர்காணல் முடிவடைந்துவிட்டது.

மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் விருப்பமனுக்களில் இருந்து வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் நேர்காணலை பிரதோஷ தினமான ஞாயிறன்று நடத்தினார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
இந்நிலையில் சிவராத்திரி கழிந்த பிறகான அமாவாசை தினமான இன்று தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிட சாத்தியக்கூறுகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் எதிர்ப்பார்ப்பினைத் தெரிவித்துள்ளன. இதனையடுத்து அதிமுகவினர் இன்றைய தேர்தல் அறிவிப்புகளுக்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு! -
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications