ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் குளித்தலையில் நீர் மோர் பந்தல் அமைத்த அதிமுகவினர்
கரூர்: முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் குளித்தலையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.
தற்போது கடும் கத்தரி வெயில் காலம். வெயிலின் தாக்கத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்காக தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல் மற்றும் மோர் பந்தல் அமைக்க அதிமுகவினருக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இதனையடுத்து கரூர் மாவட்டம் குளித்தலை அதிமுக வழக்கறிஞர் பிாிவு சார்பில் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கோடை கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
நீர் மோர் பந்தலை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு அமைச்சர் பூனாட்சி தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் குளித்தலை எம்.எல்.ஏ. பாப்பாசுந்தரம், நகர செயலாளர் சோமு ரவி, அரசு வழக்கறிஞர் நாகராஜன், வழக்கறிஞர்கள் அப்துல் அஜீஸ், நடராஜன், செந்தில்குமார், பிரபு, மீனாட்சி சுந்தரம், தாளியாம்பட்டி சக்திவேல், மருதூர் சக்திவேல் உட்பட பலா் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications