தமிழக சட்டசபையில் உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.. ஹைகோர்ட்டில் வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை ஹைகோர்ட்டில் வழக்கறிஞர் புகழேந்தி இன்று வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இதன் மீதான நீதிமன்ற உத்தரவு ஆளும் தரப்பால் மிகுந்த எதிர்பார்ப்போடு கவனிக்கப்படுகிறது.

பிப்ரவரியில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எடப்பாடி அரசுக்கு ஆதரவாக 112 எம்எல்ஏக்கள் வாக்களிதததாகவும், தற்போது 19 பேர் தங்களுக்கு முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்துள்ளதாகவும் மனு சுட்டிக்காட்டுகிறது.
எனவே, பெரும்பான்மையை இழந்துவிட்ட எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications