கர்நாடகத்தைக் கண்டித்து வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற வளாகத்தில் பேரணி
Subscribe to Oneindia Tamil
சென்னை: கர்நாடகத்தைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் பேரணி நடத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடகத்தை கண்டித்தும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், போராட்டங்கள் நடத்துவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்ற வளாகத்தில், காவிரி பிரச்சனை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று பேரணி நடத்தியுள்ளனர்.
காவிரி நதியில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை பாதுகாக்கவும், கர்நாடகாவில் உள்ள தமிழர்களை வன்முறையில் இருந்து காக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications