எனது கணவர் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் காவல்துறைதான் பொறுப்பு: சசிகலா புஷ்பா பரபரப்பு புகார்
எனது கணவரின் உயிருக்கு ஆபத்து வந்தால் அதற்கு காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும் என சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
சென்னை: எனது கணவரின் உயிருக்கு ஆபத்து வந்தால் காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி.சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள புகார் கடிதத்தில், நானும் என் கணவரும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக உள்ளோம். நான் ராஜ்ய சபா உறுப்பினராகவும் உள்ளேன். இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட மனுத்தாக்கல் செய்வதற்காக சென்ற என் கணவரை (லிங்கேஸ்வர திலகம்) ரத்த வெள்ளத்தில் காவல்துறையினர் அழைத்து சென்றதை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன்.
நான் உடனடியாக என் வழக்கறிஞர் உதவியுடன் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது எவருக்கும் இது குறித்து தெரியவில்லை என்று கூறிவிட்டனர். ஆனால் கடைசியாக காவல்துறையினர் தான் அழைத்து சென்றார்கள். அதனால் என் கணவரின் உயிருக்கு ஆபத்து வந்தால் காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும்.
மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு என் கணவர் பற்றிய தகவலை உடனே தெரிவிக்கும் படியும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை தமிழக உள்துறை செயலாளர், தமிழ்நாடு மாநில காவல்துறை தலைவர், சென்னை காவல்துறை ஆணையர் மற்றும் ராயப்பேட்டை காவல்நிலைய காவல்துறை ஆய்வாளர் ஆகியோருக்கு சசிகலா புஷ்பா அனுப்பியுள்ளார்.

-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications