தமிழகத்தில் 234 தொகுதிகளையும் கைப்பற்றி அம்மா ஆட்சியமைப்பார் - கருணாஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் 234 தொகுதிகளையும் கைப்பற்றி அம்மா ஆட்சியமைப்பார் என நடிகரும், வேட்பாளருமான நடிகர் கருணாஸ் நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார்.
நடிகர் கருணாஸ் ராமநாதபுரம், திருவாடானை தொகுதி வேட்பாளராக இந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். இன்று காலை சென்னை விருகம்பாக்கம் பகுதி கரோடியா பள்ளியில் கருணாஸ் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ் ''நானே வேட்பாளராக இருந்து கொண்டு, நான் சார்ந்த ஒரு கட்சிக்கு வாக்களிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
வெற்றிவாய்ப்பைப் பொறுத்தவரை தமிழகத்தின் 234 தொகுதிகளிலும், அம்மா தலைமையிலான அனைத்திந்திய திராவிட முன்னேற்றக்கழகம் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும்.
அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை'' என்று நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications