சேலத்தில் விரைவில் விமானப் போக்குவரத்து.... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!
சேலத்தில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு விமான சேவை விரைவில் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சேலம்: சேலத்தில் இருந்து பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களுக்கு விரைவில் விமான சேவைத் தொடங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளதாவது:
சேலம் மாவட்டம் மற்றும் மேட்டூர் தொகுதியில் எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்று செம்மலை கூறியிருந்தார். மேட்டூரில் அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

தமிழகத்தில் அரசு எந்திரம் தொய்வின்றி செயல்படுகிறது. செம்மலை அமைச்சராக இருந்தபோது என்ன திட்டத்தை மேட்டூர் தொகுதிக்குக் கொண்டுவந்தார்?
அரசியல் காழ்ப்புணர்ச்சியில் அவர் ஏதோ பேசுகிறார். சேலத்தில் விரைவில் விமானப் போக்குவரத்து சேவை தொடங்கப்படும்.
சேலம் நகரைச் சுற்றி ரிங் ரோடு கொண்டுவரப்படும். எடப்பாடி தொகுதியில் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க கூட்டு குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.












Click it and Unblock the Notifications