17ம் தேதி திருச்சியில் சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டம்: சரத்குமார்

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வருகிற 17.11.2013 அன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. கட்சியின் அவைத் தலைவர் வி.செல்வராஜ் தலைமையில் நடைபெறும் இப்பொதுக்குழு கூட்டம், திருச்சி கற்பகரட்சகி மஹாலில் (கண்டோன்மெண்ட், கோர்ட் அருகில்) நடைபெற உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல், நெல்லையில் மாநாடு உள்பட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. மற்றும் அனைத்து முக்கிய நிர்வாகிகளும் பொதுக்குழுவில் பங்கேற்க இருக்கிறார்கள்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், கேரளா, மும்பை, கர்நாடகா மாநிலங்களிலிருந்தும் பொதுக்குழு உறுப்பினர்கள் பொதுக்குழுவில் பங்கேற்க உள்ளார்கள்.
பொதுக்குழு ஏற்பாடுகளை பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், அரசியல் ஆலோசகர் திருச்சி பன்னீர் செல்வம், திருச்சி மாநகர மாவட்டச் செயலாளர் எம்.பி.முரளிதரன், மாவட்ட அவைத்தலைவர் குணசேகரன், மாவட்ட பொருளாளர் கே.கார்த்திகேயன், புறநகர் மாவட்ட செயலாளர் முரளிகிருஷ்ணன், மாநகர மாவட்ட துணைச் செயலாளர்கள் பி.எம்.ராஜ் குமார், ஜான்பிரிட்டோ, இப்ராஹிம்ஷா, ஜெயராமன், இளைஞரணிச் செயலாளர் ஜம்புகேஸ்வரன், வர்த்தக அணி செயலாளர் கே.பி. செந்தில்குமார், பொறியாளர் அணிச் செயலாளர் மகேஷ்வரன்.
வர்த்தக அணி துணைச் செயலாளர் டி.முருகன், செல்வராஜ், மாணவரணி செயலாளர் கே.ஷாரூக், மகளிரணி செயலாளர் பி.சாந்தி, வழக்கறிஞர் அணிச் செயலாளர் ரவி, தொழிலாளர் அணி செயலாளர் தாஜுதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீரங்கம் சிவகுமார், பொறியாளர் அணி துணைச் செயலாளர் பரணிதரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்' என இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications