'அம்மா' உணவகம்.. ஸ்டாலினின் 'நான் முதல்வன்'.. UPSC தேர்வில் சாதித்த மதுரை 'தமிழ் வழி' படித்த மாணவர்!
சென்னை: அம்மா உணவகத்தில் சாப்பிட்டு, முதல்வர் ஸ்டாலினின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் உதவித் தொகையுடன் பயிற்சி பெற்று UPSC மெயின் தேர்வில் தாம் தேர்ச்சி பெற்றதாக பெருமிதம் பொங்க தெரிவித்துள்ளார் தமிழ் வழியில் படித்த மதுரை மாணவர் சங்கரபாண்டிய ராஜ்.
UPSC (யுபிஎஸ்சி) தேர்வை தமிழில் எழுதி அகில இந்திய அளவில் 807-வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார் மதுரையைச் சேர்ந்த சங்கரபாண்டி ராஜ். தாம் யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்றது தொடர்பாக ஊடகங்களுக்கு சங்கரபாண்டி ராஜ் அளித்த பேட்டி: நான் மதுரை பீபி குளத்தில் வசிக்கிறேன். என் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை தாலுகாக ரெட்டியபட்டி கிராமம். அங்கு அரசு பள்ளியில்தான் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில்தான் படித்தேன்.

அழகப்பா பல்கலைக் கழகத்தில் தொலைதூர கல்வியில் பிபிஏ படித்தேன்.
2016-ம் ஆண்டு முதல் யுபிஎஸ்சி தேர்வு எழுத முயற்சித்தேன். என் அப்பா, அம்மா இருவரும் டெய்லர்தான். அவர்கள் டெய்லரிங் தொழில் மூலமே வருவாய் ஈட்டி என்னை படிக்கவும் வைத்தனர்.
சென்னைக்கு வந்தது முதல் மாணவர்களுக்கு டியூசன் எடுப்பது உள்ளிட்ட அனைத்து விதமான வேலைகளையும் செய்தேன். அம்மா உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு ஆண்டுக்கு 8 மாதம் வேலை செய்து அதில் கிடைத்த பணத்தை வைத்து 4 மாதங்கள் மட்டுமே யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகிவந்தேன். 7 ஆண்டுகள் தொடர்ந்து சிரமப்பட்டுதான் இந்த யுபிஎஸ்சி தேர்வை எதிர்கொண்டோம். தமிழ் வழியில் படித்த எங்களால் வேறு மாநிலத்துக்கு சென்று படிக்கவும் சிரமமாக இருந்தது.
இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு அரசின் முதல்வர் மு.கஸ்டாலினின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ரூ.7,500 மாத உதவித் தொகையுடன் படிக்க முடிந்தது. இந்த உதவித் தொகை கிடைத்ததால் எங்களால் வேகமாகவும் படிக்க முடிந்தது. முதன்மைத் தேர்வு எழுதுவதற்காக தமிழ்நாடு அரசாங்கம் எங்களுக்கு பயிற்சியும் தந்தது. இவை எங்களுக்கு இந்த தேர்வில் வெற்றி பெறுவதற்கு மிகவும் உந்துதலாக இருந்தது. இவ்வாறு சங்கரபாண்டி ராஜ் தெரிவித்தார்.
யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற 50 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவரான சிவச்சந்திரன், அகில இந்திய அளவில் 23-வது இடமும் தமிழ்நாட்டில் முதலிடமும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications