திண்டுக்கல்லில் கரித்துண்டுகளால் சுவரோவியம் வரையும் பெயர் தெரியாத கலைஞர்!
சில கரித்துண்டுகள், சாக்பீஸ், இலைகளைக் கொண்டு அற்புதமான ஓவியங்களை ஒருவர் வரைகிறார். அவரைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. ஆனால் அவர் ஓவியங்களைக் கண்டு மக்கள் பிரமித்து நிற்கின்றனர்.
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பொது சுவற்றில் அழகான ஓவியங்களை பெயர் தெரியாத ஒருவர் தீட்டுகிறார். அந்த ஓவியங்களைப் பார்த்த மக்கள் மெய் மறந்து நிற்கின்றனர்.
திண்டுக்கல்- பழநி சாலையில் சுவர் ஓவியங்களை ஒருவர் மிக அற்புதமாகவும் தத்ரூபமாகவும் வரைகிறார். இதற்காக அவர் சிறப்பு வண்ணக் கலவைகளைப் பயன்படுத்துவது இல்லை. பிரத்யேகமாக பிரஷ்கள் கூட பயன்படுத்துவதில்லை என்பதுதான் ஆச்சர்யம்.

பார்ப்பதற்கு மிக எளிமையாக, வறுமையால் பாதிக்கப்பட்டவரைப் போல் ஒடுங்கிய கன்னங்கள், அடர்ந்த தாடி, பல நாட்களாக துவைக்காத ஆடையுடன், தன் விரல்களில் சிறிது நேரத்தில் பேரற்புதத்தை நிகழ்த்தி விடுகிறார். ஓவியம் வரைய கரித்துண்டுகள், செங்கல் பொடி, சாக்பீஸ் துண்டுகள் மற்றும் சில இலைகள் என மிகச் சில பொருட்களையே பயன்படுத்துகிறார். ஆனால் அதி அற்புதமான ஓவியங்களை வரைகிறார்.
அவர் வரையும் ஓவியங்கள் இன்றைய டிஜிட்டல் உலகின் 3டி ஓவியங்களுக்கு சவால் விடும்படியாக உள்ளன. பெரும்பாலும் இயற்கை காட்சிகளையே ஓவியங்களாக வரைகிறார். அந்த ஓவியங்களைப் பார்க்கும் மக்கள் மெய் மறந்து நிற்கின்றனர். மேலும், பொதுமக்கள் அவரின் திறமையை பாராட்டும் விதமாக தங்களால் இயன்ற பொருளுதவியை அளிக்கின்றனர். ஆனால், அவர் பெயர் மற்றும் ஊர் என எந்த தகவலும் தெரியவில்லை. அவர் யாருடனும் உரையாடுவதும் இல்லை.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications