சட்டசபை தேர்தலில் போட்டியிட பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி தயக்கம்?
சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பதில் பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் குழப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாமக தனித்தே போட்டியிடுகிறது. அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் வரலாம் என பாமக அழைத்துப் பார்த்தும் எந்த கட்சியும் வரவில்லை.
பாஜகவும் பாமகவை வளைக்கப் பார்த்தது. ஆனாலும் எதுவும் நடக்காமல் போன நிலையில் தனித்தே களமிறங்கிவிட்டது பாமக. இதுவரை 2 கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் பாமக வெளியிட்டுள்ளது.

ஆட்சியை கைப்பற்ற முடியாது
இந்த நிலையில் லோக்சபா எம்.பி.யும் முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்ற குழப்பத்தில் இருந்து வருகிறாராம்... பாமக என்னதான் தனித்து போட்டியிட்டாலும் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

உள்ளதும் போய்விடும்
சட்டசபை தேர்தலில் அன்புமணி போட்டியிட வேண்டுமானால் எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி ராஜினாமா செய்து தேர்தலில் போட்டியிட்டால் வென்றாக வேண்டிய நெருக்கடி அன்புமணிக்கு இருக்கிறது. ஒருவேளை அன்புமணி வெல்ல முடியாமல் போனால் எம்.பி. பதவியையும் இழந்து நிற்க வேண்டியதுதான்.

எதை ராஜினாமா செய்வார்?
அப்படி அன்புமணி வெற்றி பெற்றும் பாமக ஆட்சி அமைக்க முடியாமல் போனால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவே அவர் முன்வருவார். இது மக்களிடையே கடும் விமர்சனத்தை உருவாக்கும். அத்துடன் சட்டசபை தேர்தலிலேயே போட்டியிடாவிட்டால் ஒரு முதல்வர் வேட்பாளரே போட்டியிடாமல் ஓடிவிட்டார் என ஏகடியம் பேசப்படுகிற நிலை உருவாகும்.

இதுதான் காரணம்...
ஆகையால் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பதில் அன்புமணி பெரும் குழப்பத்தில் இருக்கிறார். இதனால்தான் பாமகவின் 2-கட்ட வேட்பாளர் பட்டியலிலும் அன்புமணி போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்படவில்ல என்கின்றன பாமக வட்டாரங்கள்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி












Click it and Unblock the Notifications