ட்விட்டரில் படம் போட்டுக் காட்டி வாக்கு கேட்கும் அன்புணி ராமதாஸ்
சென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் படம் போட்டுக் காட்டி வாக்கு சேகரித்து வருகிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். மேலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பாமக இளைஞர் அணி தலைவரும், முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் மூலம் பிரச்சாரம் செய்து வருகிறார். அவரின் ட்விட்டர் பிரச்சாரம் ஒரு பார்வை,
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) April 26, 2016 |
இளைஞர்கள்
அன்புமணிக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ள நிலையில் இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) April 27, 2016 |
இலவசங்கள்
மக்களை இலவசத்திற்காக கையேந்திட விட மாட்டேன். சுயமரியாதையுடன் வாழ வைப்பேன் என்று வாக்குறுதி அளிக்கிறார் அன்புமணி ராமதாஸ்.
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) April 27, 2016 |
மாங்கனி
எளிய மனிதர்கள் தேர்தலில் போட்டியிடுவது எட்டாக்கனியாகிப் போன நிலையை மாற்ற மாங்கனிக்கு வாக்களிப்பீர் என கோரிக்கை விடுத்துள்ளார் அன்புமணி.
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) April 28, 2016 |
விட மாட்டேன்
இனியும் என் தமிழ் மக்களின் அறியாமையையும், வறுமையையும் பயன்படுத்தி ஏமாற்றி வரும் திராவிடக் கட்சிகளை ஆட்சிக்கு வர விட மாட்டேன் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications