இலவசங்களுக்கு கடன் வேண்டாம், அத்திக்கடவு திட்டத்திற்கு வாங்குங்கள்... அன்புமணி அட்வைஸ்!
அத்திக்கடவு அவிநாசி திட்டம் வாழ்வாதாரப் பிரச்னை என்பதால் அரசு உடனடியாக கடன் வாங்கியாவது தொடங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கோவை : அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை அரசு கடன் வாங்கியாவது நிறைவேற்றியே தீர வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறோம். காலை அத்திக்கடவு பகுதியில் தொடங்கி அன்னூர், அவிநாசி என்று மாலையில் பெருந்துறையில் பொதுக்கூட்டம் நடத்துகிறோம்.
கொங்கு மண்டல மக்களின் 55 ஆண்டுகால கனவுத்திட்டம். காமராஜர் காலத்தில் மாரப்ப கவுண்டர் அவர்களால் வலியுறுத்தி 62ல் அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டம் இன்னும் கிடப்பில் உள்ளது. திமுக, அதிமுக மாறி மாறி உறுதி கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, தேர்தலுக்கு முன்பு உறுதியளிப்பார்கள் ஆனால் நிறைவேற்றமாட்டார்கள்.

55 ஆண்டுகால திட்டம்
காமராஜர் ஆட்சி காலத்திலேயே இந்த திட்டம் ரூ. 10 கோடி இது இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 96ல் இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.137 கோடியானது. 2002ல் ரூ.280 கோடியாக இருந்த திட்ட மதிப்பீடு 2012ல் ஆயிரத்து 800 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால் இன்று இந்த திட்டத்தின் மதிப்பு ரூ. 3 ஆயிரத்து 500 கோடி, ஆனாலும் இந்தப் பகுதியில் மிகப்பெரிய வறட்சி இருக்கிறது.

கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்
இது மேடான பகுதி. ஆயிரத்து 800 முதல் இரண்டாயிரம் அடிக்கு கீழ் நிலத்தடி நீர் சென்றுள்ளது. அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றினால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும், 50 லட்சம் மக்கள் குடிநீர் வசதி பெற முடியும். 31 பொதுப்பணித்துறை ஏரிகள், 40 ஊராட்சி மன்ற குளங்கள் என 701 நீர்நிலைகளுக்கு தண்ணீர் சென்று நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்த திட்டம் வேண்டும் என்று பாமக போராடி வருகிறது. தேர்தலுக்கு முன்பு இளைஞர்கள் போராடியதால் ஜெயலலிதா இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்ற கடந்த பிப்ரவரி மாதம் உறுதியளித்தார்.

மாற்றுத் திட்டம் வேண்டாம்
ஆனால் தற்போது அரசு இதற்கு மாற்றாக காளிங்கராயர் காரமடை திட்டம் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. எங்களுடைய நோக்கம் காமராஜர் காலத்தில் அறிவிக்கப்பட்ட அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

நிலத்தடி நீரை அதிகரிக்க வேண்டும்
இது உபரி நீர் திட்டம். இதைக் கொண்டு வருவதால் யாருக்கும் பாதிப்பு இருக்காது. 1951 முதல் 96 வரை இந்த அணை 26 முறை நிரம்பி வழிந்துள்ளது. உபரி நீர் காவிரி டெல்டா பகுதிக்கு சென்றும் பயனில்லாமல் போகிறது, எனவே உபரி நீரை வறட்சி இருக்கும் பகுதிக்கு திருப்பி நிலத்தடி நீரை அதிகரிக்க வேண்டும்.

கடன் வாங்கியாவது செய்ய வேண்டும்
இலவச திட்டங்களுக்கு கடன் வாங்காமல் நீர்நிலை திட்டங்களை நிறைவேற்ற அதற்கு கடன் பெற்று இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதனை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினருடன் இணைந்து போராடி வருகிறோம். இது அரசியல் பிரச்னையல்ல, குடிநீர் பிரச்னை, பொதுப்பிரச்னை, மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை என்பதை உணர்ந்து அரகு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications