12 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: நேரில் போய் நலம் விசாரித்தார் தர்மபுரி எம்.பி. அன்புமணி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தர்மபுரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களில் சுமார் 12 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், தர்மபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அன்புமணி ராமதாஸ் இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பச்சிளங்குழந்தைகள் பிரிவில், கடந்த 14ம் தேதி முதல் இதுவரை சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்ட குழந்தைகளில் 12 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

குழந்தைகளின் மரணத்திற்குக் காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications