அன்புமணியின் தாமதம்
Subscribe to Oneindia Tamil
இந்த விவகாரம் குறித்து கடந்த சில நாட்களாகவே பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தர்மபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் இவ்விவகாரத்தில் கருத்து எதுவும் தெரிவிக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வந்தார். இது, சலசலப்பை ஏற்படுத்தியது.
மருத்துவரான அன்புமணி, குழந்தைகள் தொடர் பலி விவகாரம் தொடர்பாக கண்டனம் அல்லது விசாரணைக் கோரல் என நேற்று வரை எந்த அறிக்கையும் தராமல் இருந்தார்.

இதனால், தனது தொகுதியில் நடந்துள்ள இத்தகைய கசப்பான சம்பவத்திற்கு குரல் கொடுக்காததன் மூலம், தனது தொகுதி மக்கள் மீது அவர் அக்கறையின்றிக் காணப்படுகிறார் என தொகுதியில் பேச்சு எழுந்தது.












Click it and Unblock the Notifications