அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் போர்வையில் ஆந்திரா குண்டர்கள் குவிப்பு?
சசிகலா புஷ்பாவின் கணவரை தாக்கியவர்கள் ஆந்திராவில் இருந்து அழைத்துவரப்பட்ட குண்டர்களா? என அதிமுக தொண்டர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சென்னை: சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் போர்வையில் ஆந்திராவில் இருந்து குண்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனரா? என்ற சந்தேகத்தை அக்கட்சி தொண்டர்கள் எழுப்பியுள்ளனர்.
சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரனை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒரு கும்பல் இன்று கொலைவெறியுடன் கொடூரமாக தாக்கியது. சின்னம்மா வாழ்க என்ற கோஷத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆந்திரா பதிவெண் கொண்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆகையால் அதிமுக தொண்டர்கள் போர்வையில் ஆந்திராவில் இருந்து குண்டர்கள் வரவழைக்கப்பட்டு இத்தாக்குதல் நடந்திருக்கலாம் என அக்கட்சியினர் சந்தேகிக்கின்றனர்.
இத்தனைக்கும் சசிகலா நடராஜன் அதிமுக பொதுச்செயலராக எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கைத் தொடர்ந்தவர்களில் ஒருவரான லிங்கேஸ்வரன் மீதே ஆந்திராவில் இருந்து வரவழைக்கப்பட்ட குண்டர்கள் மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது சசிகலா நடராஜன் எதிர்ப்பாளர்களுக்கான மிரட்டல் என்கின்றனர் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications