Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குலதெய்வ கோயில் கும்பாபிஷேகம்! உருகி வேண்டிய துர்கா ஸ்டாலின்! எவ்ளோ சிம்பிளா இருக்காங்க பாருங்களேன்!

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், கொடியசைத்து தொடங்கி வைத்தார். கும்பாபிஷேக நிகழ்ச்சியில், முதல்வரின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோயில் அம்மன், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களுக்கு குலதெய்வமாக விளங்கி வருகிறது. அந்த வகையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தந்தை ச.ஜெயராமனின் குலதெய்வ கோயிலாகவும் இக்கோயில் உள்ளது.

துர்கா ஸ்டாலின்

துர்கா ஸ்டாலின்

தனது தந்தை வழி குலதெய்வ கோயில், துர்கா ஸ்டாலின் உதவியுடன் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது. மேலும், புதிதாக கோவில் கொடிமரம், விநாயகர், ராகு, கேது, பிரதிஷ்டை செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த இரண்டாம் தேதி பூர்வாங்க பூஜைகளும், 33 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு வெகு விமரிசையாக யாகசாலை பூஜைகளும் நடைபெற்று வந்தது. இன்று காலை ஆறாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

 கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

இதனையடுத்து பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்கள் மேள, தாளங்கள் முழங்க புறப்பட்டது. கோவிலை வலம் வந்து ராஜகோபுரம், அம்பாள், பரிவார மூர்த்திகளின் விமானங்களை அடைந்தது. முதல்வர் குடும்பத்தினர், புனித நீர் அடங்கிய கடங்கள் முன்பு கோயிலை வலம் வந்தனர்.

கொடியசைத்த துர்கா

கொடியசைத்த துர்கா

பின்னர், துர்கா ஸ்டாலின் கொடியசைக்க, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் பிச்சை குருக்கள் திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் ஆகியோர் தலைமையில், சிவாச்சாரியார்கள், பூஜிக்கப்பட்ட கடங்களில் இருந்த புனித நீரை விமான கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

முதல்வர் குடும்பத்தினர்

முதல்வர் குடும்பத்தினர்

இந்த கும்பாபிஷேகத்தில், முதல்வரின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், மைத்துனர் டாக்டர் ராஜமூர்த்தி, நடிகர் சந்திரசேகர், அமைச்சர் மெய்ய நாதன், எம்.எல்.ஏக்கள் பூம்புகார் நிவேதா முருகன், சீர்காழி பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியத் தலைவர் இரா லலிதா, மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+