ராஜாஜி ஹால், அண்ணா சமாதி வளாகத்தில் என்ன நடக்கிறது.. புதிய தகவல்
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் அண்ணா சமாதி தொடர்பான கோப்புகள் ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வெழளியான நிலையில், ராஜாஜி ஹால் குறித்தும் சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி விட்டன.
இதுதொடர்பான பணிகள் இன்று பிற்பகல் முதல் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவித்தன. அண்ணா சமாதியின் பின்புறம் உள்ள பகுதி ஆராயப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல ராஜாஜி ஹால் பகுதியிலும் சில பணிகள் நடந்து வருகின்றன. அங்குள்ள விளக்குகளை சரி பார்க்கும் பணி நடந்து வருகிறது. மேலும் அரங்கத்தை சரி பார்க்கவும் அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
அதேபோல, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் காவல்துறையினல் அலர்ட்டான நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனராம். விடுப்பில் உள்ளவர்கள் பணிக்குத் திரும்புமாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுதொடர்பாக வாய்மொழி உத்தரவுகளே பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக எந்த உத்தரவும் இதுவரை பிறப்பிக்கப்படவி்ல்லை என்றும் தெரிகிறது.

இந்த நிலையில் ராஜாஜி ஹால் பகுதியில் பழுதடைந்த மின் விளக்குகள் சரிசெய்யப்பட்டதாகவும், அண்ணா சமாதி பகுதியில் நடந்து வரும் பணிகள், ஜெயலலிதா சமாதி தொடர்புடையது என்றும் இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications