"தி இந்து"வில் இருந்து பிரவீன் ஸ்வாமி, சாய்நாத் ராஜினமா!
தி இந்து ஆங்கில நாளிதழில் கடந்த ஆண்டு நிர்வாக மாற்றங்கள் செய்யப்பட்டன. அப்போது தி இந்து ஆங்கில நாளிதழ் ஆசிரியராக இருந்த சித்தார்த வரதராஜன், எக்ஸ்கியூட்டிவ் எடிட்டர் வேணு ஆகியோர் வெளியேறினர்.
இந்நிலையில் தற்போது பிரவீன் ஸ்வாமியும் சாய்நாத்தும் பணியில் இருந்து விலகுவதாக நிர்வாகத்திடம் கடிதம் அனுப்பியுள்ளனர்.
பணியில் இருந்து விலகி உள்ள பிரவீன் ஸ்வாமி, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் "நேஷனல் எடிட்டர்" பதவியில் அமர்கிறார். 2007ஆம் ஆண்டு மகசாசே விருது பெற்ற சாய்நாத் உடனடியாக வேறு நாளிதழில் பணிக்கு சேரப்போவதில்லை என்று கூறப்படுகிறது.
தம் வசம் உள்ள சில கிராமப்புற ஆய்வு திட்டங்களை நிறைவு செய்த பினன்ர்தான் சாய்நாத், வேறு பணியில் இணைவார் என்றும் தெரிகிறது.
இதேபோல் 10க்கும் மேற்பட்ட மூத்த பத்திரிகையாளர்களும் தி இந்து குழுமத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.