நீட்டுக்கு 3வது பலி.. புதுச்சேரிக்கு தேர்வு எழுத சென்ற பண்ருட்டி மாணவி தந்தை நெஞ்சு வலியால் மரணம்!
நீட் தேர்வு எழுத வந்த பண்ருட்டியை சேர்ந்த மாணவியின் தந்தை நெஞ்சுவலியால் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று மரணம் அடைந்துள்ளார்.
Recommended Video

புதுவை: பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி ஒருவரின் தந்தை மகள் நீட் தேர்வு எழுதச் சென்றபோது, நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார். நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள உயிர்பலி மூன்றாக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நேற்று நடந்த நிலையில், தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது.

இதில் ஏற்பட்ட அதீத மன உளைச்சல் மற்றும் அலைக்கழிப்பின் காரணமாக கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வெழுதச்சென்ற திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கம் என்கிற மாணவனின் தந்தை கிருஷ்ணசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அதேபோல, சிவகங்கை சிங்கம்புணரியைச் சேர்ந்த கண்ணன், மதுரை பசுமலையில் தேர்வெழுதி விட்டு மகள் ஐஸ்வர்யாவை ஊருக்கு அழைத்து வரும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த இரு மரணங்களும் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் இன்று புதுவையில் உயிரிழந்துள்ளார். நேற்று மகள் சுவாதியை புதுவையில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் தேர்வு எழுத அழைத்து வந்த நிலையில், அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதன் மூலம் ,தமிழகத்தின் நீட் தேர்வால் ஏற்பட்ட மரணங்கள் இந்த ஆண்டு மூன்றாக அதிகரித்துள்ளது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications