எம்.எஸ்.ஸுக்குப் பிறகு முதல் முறையாக ஐ.நா.வில் ஒரு இந்தியக் கச்சேரி.. 50 ஆண்டுகளுக்குப் பின்!
சென்னை: சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.நா சபையில் இந்தியர் ஒருவரின் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெறுகிறது. இந்த பெருமைக்கு சொந்தக்காரர் வேறு யாருமல்ல, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தான்.
அடுத்தமாதம் 15ம் தேதி இந்தியாவின் 69-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதை ஐநா சபையில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி சிறப்பு இசை நிகழ்ச்சிக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த இசை நிகழ்ச்சியை பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நடத்த உள்ளார். அன்றைய தினம் ஏ.ஆர். ரகுமானின் பாடல்களை கேட்க 193 நாடுகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஐ.நா. சபைக்கு வர உள்ளனர்.
இதற்கு முன்னர் கடந்த 1966ம் ஆண்டு பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி ஐ.நா சபையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். அதன்பிறகு 50 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் மற்றொரு இந்தியரின் இசை நிகழ்ச்சி ஐ.நா. சபையில் நடைபெற உள்ளது.
இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் ஐ.நா. சபையில் இசை நிகழ்ச்சி நடத்திய, நடத்த இருக்கும் இருவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
ஏ.ஆர்.ரஹ்மான் சர்வதேச அளவில் 2 கிராமி விருதுகள், 2 ஆஸ்கர் விருதுகள், ஒரு தடவை 'கோல்டன் குளோப்' விருது பெற்றுள்ளார். எனவே, அவருக்கு உலகம் முழுவதும் இசை ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications