அரபிக்கடலில் உருவானது 'லூபன்' புயல்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை!
அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலையால் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இன்று அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெற்றுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
[ காவிரியில் தலைமுழுகி... ஜெயலலிதாவுக்கு தர்ப்பணம் கொடுத்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன்! ]
லூபன் என பெயர்
இந்த புயலுக்கு லூபன் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. லூபன் புயல் ஓமனில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாழ்வு மண்டலம்
இதனிடையே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த மத்திய வங்கக்கடல் பகுதியில் வலுவான காற்றழுத்த மண்டலமாக நிலவி வருவதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
புயலாக மாறும்
அடுத்த 2 நாட்களில் இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில்
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் அனேக இடங்களில் மிதமான மழை, வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.