காவிரியில் தலைமுழுகி... ஜெயலலிதாவுக்கு தர்ப்பணம் கொடுத்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன்!

ஜெயலலிதாவுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தர்ப்பணம் கொடுத்தார்

Subscribe to Oneindia Tamil

நாகை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மறைந்த ஜெயலலிதாவிற்கு கைத்தறித்துறை அமைச்சா் ஓ.எஸ்.மணியன் இன்று தா்ப்பணம் கொடுத்தார்.

புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு செய்தால் புண்ணியம் அடைவர் என்பது நம்பிக்கை.

[அடேங்கப்பா என்ன ஒரு பூரிப்பு மோடி முகத்தில்.. அப்போ, 'ஓகேயாகிவிட்டதா?']

 புனித நீராடல்

புனித நீராடல்

அந்தவகையில், இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

 மகாளய அமாவாசை

மகாளய அமாவாசை

புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நாட்களில் நீர்நிலைகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, சுவாமி தரிசனம் செய்வார்கள். இன்று மிக முக்கியமான அமாவாசை என்பதால், இந்துக்கள் புண்ணிய ஸ்தலங்களில் நீராடி தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டு வருகிறார்கள்.

 புஷ்கர நிறைவு விழா

புஷ்கர நிறைவு விழா

அதன்படி, துலாகட்டத்திலும் இன்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தர்ப்பணம் செய்தனர். அதுமட்டும் இல்லாமல் மயிலாடுதுறையில் காவிரி அந்திம புஷ்கர நிறைவு விழா இரு நாட்களுக்கு நடைபெறுகிறது.

 ஜெயலலிதாவுக்கு தர்ப்பணம்

ஜெயலலிதாவுக்கு தர்ப்பணம்

அந்திம புஷ்கர விழா மற்றும் மகாளய அமாவாசை முன்னிட்டு துலா கட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காவிரியில் நீராடினார். அவருடன் ஏராளமானோரும் நீராடினார்கள். பின்னர் முன்னோர்கள் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரில் தர்ப்பணம் கொடுத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+