For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமித்ஷாவைப் புகழ்வதில், தமிழிசைக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் அடேங்கப்பா போட்டி

அமித்ஷாவைப் புகழ்வதில் தமிழிசைக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் போட்டி நடப்பதைப் போல மாறி மாறி புகழ்ந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேற்று தமிழகம் வந்திருந்தார். அப்போது, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அமித்ஷா வருகை குறித்து, தமிழிசை சௌந்தரராஜன், கூறுகையில், அமித்ஷா தமிழகம் வந்ததால் மழை வந்தது என்றும் மழை வந்துள்ளதால், தமிழகத்தில் குளங்கள் நிரம்பும். குளங்கள் நிரம்பினால் நிச்சயமாக தமிழகத்தில் தாமரை மலரும் என்று கூறியிருந்தார். தமிழிசையின் இந்த பேச்சு நெட்டிசன்களால் பெரிய அளவில் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.

Are competition between Thamilisai and Pon.Radhakrishnan in glorify of Amit Shah?

இந்நிலையில், அமித்ஷா வந்ததால்தான் தமிழகத்தில் மழைவந்தது என்ற அமித்ஷாவைப் புகழ்ந்த தமிழிசையின் பேச்சுடன் போட்டிபோடும் விதமாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அமித்ஷாவைப் புகழ்ந்து டிவிட் செய்துள்ளார்.

அமித்ஷாவின் வருகை குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

விளக்கின் ஒளி வரும்போது இருள் பயப்படத்தான் செய்யும் என்றும், அமித்ஷா என்னும் ஒளி வடிவில் தர்மத்தின் ஆட்சி தமிழகத்தில் வருவதை இருண்ட ஆட்சியை தந்த திமுக எதிர்க்கத்தான் செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் இனி இருண்ட ஆட்சிக்கு இடமே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவைப் புகழ்வதில் பாஜக தமிழ்மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு போட்டி நடப்பது போல உள்ளது துலக்கமாகிறது.

English summary
Competition going between Pon.Radhakrishnan and Thamizisai Soundararajan in glorify of Amit Shah, Pon.Radhakrishnan tweets, Amit Shah comes to Tamilnadu in a shape of light so after here no space to dark rule in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X