ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கு- ஜெயேந்திரர் விடுதலைக்கு எதிராக அரசு அப்பீல் செய்ய முடிவு
சென்னை: ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் உட்பட 9 பேரையும் விடுதலை செய்து சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதனை எதிர்த்து தமிழக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு பரிந்து செய்துள்ளதாக அரசு சிறப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் 2002-ம் ஆண்டு சென்னை மந்தைவெளியில் மர்மநபர்களால் தாக்கப்பட்டார். இது குறித்து ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்திருந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர் உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்து வந்தது. இதில் குற்றம்சாட்டப்பட்ட கதிரவன், அப்பு ஆகியோர் இறந்துவிட்டனர். எனவே, மற்ற 9 பேர் மீதான வழக்கு விசாரணை முடிவடைந்து, இன்று இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.
சுந்தரேச அய்யர், ரகு, சுந்நதர், ஆனந்த், லட்சுமணன், பூமிநாதன், கண்ணன், குமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அப்பு விசாரணை காலத்தில் உயிரிழந்து விட்டார். மேலும் கதிரவன் என்பவர் சென்னையில் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 14 வடருடங்களுக்கு பிறகு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அப்ரூவர் ஆக மாறிய ரவிசுப்பிரமணியன் மீதான வழக்கை தொடர்ந்து நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு பரிந்து செய்துள்ளதாக அரசு சிறப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications