ஆவின் பால் கலப்பட வழக்கு.. சிபிசிஐடி போலீஸ் மீதே குற்றச்சாட்டை திருப்பிவிட்ட வைத்தியநாதன்
விழுப்புரம்: ஆவின் பால் கலப்பட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வைத்திய நாதன், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், "வழக்குக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தவறாக எங்களை சேர்த்துள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கில் தொடர்புடையவர்களை விரைந்து பிடித்து வந்து ஆஜர் படுத்தாமல் வேண்டுமென்றே வழக்கை தாமதப்படுத்துகின்றனர்" என்று குற்றம்சாட்டினார்.
ஆவின் பால் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரியில் பாலை திருடி, அதற்கு பதிலாக தண்ணீர் ஊற்றி ஒரு கும்பல் கலப்படத்தில் ஈடுபட்டது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலத்தை சேர்ந்த சுரேஷ், ரமேஷ், சத்தியராஜ், அன்பு உள்பட 8 பேரை வெள்ளிமேடுபேட்டை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், பால் ஏற்றுமதி வாகன காண்டிராக்டரான சென்னையை சேர்ந்த அரசியல் பிரமுகர் வைத்தியநாதன், அவரது மனைவி ரேவதி ஆகியோருக்கும் இந்த மோசமான செயலில், தொடர்பு இருப்பது தெரியவந்தது.

சிபிசிஐடி
இந்த மோசடியில் பலருக்கும் தொர்புள்ளது தெரியவந்ததால், வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வைத்தியநாதன் உள்பட 23 பேரை கைது செய்தனர். தற்போது இவர்கள் சிறையில் உள்ளனர். விழுப்புரம் தலைமை குற்றவியல் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது.

வழக்கு கடந்த பாதை
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி வழக்கில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் வைத்திய நாதன், ரேவதி மற்றும் லாரி டிரைவர்கள் உள்பட 23 பேர் மீது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இறுதி குற்றப்பத்திரிகை இவ்வாண்டு பிப்ரவரி மாதம் தாக்கலானது.

குற்றச்சாட்டு
இந்த வழக்கு விசாரணை நீதிபதி அன்புமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வைத்திய நாதன், ரேவதி உள்பட 25 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணையின் போது இந்த வழக்குக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தவறாக எங்களை சேர்த்துள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கில் தொடர்புடையவர்களை விரைந்து பிடித்து வந்து ஆஜர் படுத்தாமல் வேண்டுமென்றே வழக்கை தாமதப்படுத்துகின்றனர் என்று வாதிட்டனர்.

விசாரணை ஒத்திவைப்பு
வழக்கை கண்காணித்து விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைத்தியநாதன் தரப்பு கேட்டுக்கொண்டது. வழக்கு விசாரணையை வருகிற 30ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி அன்புமணி உத்தரவிட்டார்.
-
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
ஆவின் கிரீன் மேஜிக் பால் விநியோகம் நிறுத்தப்படுகிறது? தமிழக அரசின் முடிவு.. என்ன காரணம்? -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications