கார் கண்ணாடி உடைப்பு: டென்ஷன் ஆகாமல் இருந்த அழகிரி
மதுரை: உசிலம்பட்டியில் அழகிரியை பார்க்க, அவருக்கு சால்வை அணிவிக்க அவரது ஆதரவாளர்கள் முந்தியடித்ததில் அவரது கார் கண்ணாடி உடைந்தது.
மு.க. அழகிரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கம்பம் சென்றார். கம்பம் செல்லும் வழியில் உசிலம்பட்டியில் அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவரது ஆதராவளர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து, சால்வை அணிவித்தனர். அழகிரி காருக்குள் இருந்தபடியே சால்வைகளை பெற்றுக் கொண்டார். அவருக்கு சால்வை அணிவிக்க ஆதரவாளர்கள் முந்தியடித்தனர். இதனால் அவரது கார் கண்ணாடி உடைந்தது. இதை பார்த்த அழகிரி விடுங்கய்யா என்று கூறி கண்ணாடி உடைந்ததை பார்த்து பதட்டம் அடைந்த தொண்டர்களை சமாதானம் செய்துவிட்டு கிளம்பிச் சென்றார்.
கம்பம் நிகழ்ச்சியின்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், தனக்கும் தனது சகோதரர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையேயான உறவை யாராலும் பிரிக்க முடியாது என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.