தேர்தல் வரும்போது விவசாயிகள் நாட்டின் முதுகெலும்புகள்.. பிறகு அடிமைகள்.. அய்யாக்கண்ணு காட்டம்
தேர்தல் வரும்போதுதான் விவசாயிகள் நாட்டின் முதுகெலும்புகள் என அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.
Recommended Video

நீலகிரி: அரசியல்வாதிகளுக்கு தேர்தல் வரும்போது விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பாகவும், தேர்தல் முடிந்துவிட்டால், அவர்கள் இந்த நாட்டின் அடிமைகளாகவும் தெரிவார்கள் என்று அய்யாக்கண்ணு காட்டமாக தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலைக்கு விலைநிர்ணயம் செய்யக்கோரியும், நிலுவை தொகையை வழங்கக் கோரியும் குன்னூர் தேயிலை வாரியம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை ஏற்றார். படுக தேச கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மஞ்சை மோகன் முன்னிலையில் ஏராளமானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து தகவலறிந்து களத்துக்கு வந்த தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் பால்ராசு ஆர்ப்பாட்டக்கார்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 2 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியில் வரும் 15-ம் தேதிக்குள் நிலுவைத் தொகை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதன்பேரில், ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின்போது, அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தேர்தல் வரும்போது விவசாயிகள் நாட்டின் முதுகெலும்புகள். தேர்தல் முடிந்துவிட்டால், அவர்கள் இந்த நாட்டின் அடிமைகளாவர். விவசாயிகளுக்கு லாபகரமான விலை கொடுக்க மறுக்கின்றனர். பசுந்தேயிலைக்கு விலையாக ரூ.50 கொடுக்கலாம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும்போது கூட்டுறவு சங்கத்தில் லாபம் கிடைத்தது. ஊட்டி தேயிலை என்று விற்பனை செய்தார்கள்.
நான்கு கிலோவிற்கு ரூ. 120 ஆகிறது. அத்துடன் ரூ. 50-ஐ சேர்த்து ரூ. 200-க்கு விற்பனை செய்யலாம். இதனால், பொதுமக்களும், தேயிலை விவசாயிகளும் பயன்பெறலாம். தேயிலை விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்ய வேண்டும். படுக இன மக்கள் செய்யும் தேயிலை தொழில் அழிவின் விளிம்பில் உள்ளது. படுக மக்களை எஸ்.டி., பிரிவில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications